Tue. Sep 17th, 2024

சாத்தான்குளம் அருகே மனைவி கொலை – கணவர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையை சேர்ந்த திரு. பிரபாகர் பீம்சிங் த/பெ இஸ்ரவேல் (வயது 45 ) மற்றும் அவரது மனைவி ஆஷா க/பெ பிரபாகர் பீம்சிங் (வயது 33 ) ஆகியோருக்கிடையே கடன் பிரச்சனையின் காரணமாக தகராறு ஏற்பட்டு மனைவியின் கழுத்தை பிரபாகர் பீம்சிங் அறுத்ததாவும், அதன் காரணமாக  அவர்  இறந்து விட்டதாகவும். அதனைத் தொடர்ந்து அவரது கணவர் பிரபாகர் பீம்சிங் என்பவரும் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தன்பேரில் காவல் துறையினரால் மேற்படி நபர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு சாத்தாக்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது. மேற்படி பிரபாகர் பீம்சிங் என்பவர் பன்றி வளர்ப்பு தொழில் செய்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் உண்டாக்கி உள்ளது

Related Post