Thu. Sep 19th, 2024

வேப்பங்காட்டில்பனை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

உடன்குடி,மே.2: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா குருகாபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் காமராஜ்(45) பனை ஏறும் தொழிலாளி. அவரது அக்கா மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காட்டில் உள்ள அக்கா மகள் முத்துலெட்சுமியின் கணவர் ரமேஷ் என்பவர் தோட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பனை ஏறும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பனை ஏறி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பனைமரத்திலிருந்து கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் விரைந்த மெஞ்ஞானபுரம் போலீசார் காமராஜ் உடலைக் கைப்பற்றி திருச்செந்து£ர் அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து அவரது சகோதரர் இசக்கிமுத்து அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் சப்இன்ஸ்பெக்டர் சண்முகராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Post