பேய்க்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவில் ஆயிரம் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன் (எ) கிட்டு (40) என்பவர் வசித்து வருகிறார்
நேற்று (31.03.25) இரவு சவேரியார்புரம் விளக்கிலுள்ள அவரது தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்.
இன்று (01.04.2025) அதிகாலை 3.00 மணியளவில் ஆடுகள் விற்பனை செய்யும் நபர்கள் அவரைக் காண தோட்டத்திற்கு சென்றபோது, அத்தோட்டத்தில் மேற்படி நபர் வலிப்பு நோய் காரணமாக இறந்த நிலையில் கண்டுள்ளனர்.
உடனடியாக மேற்படி நபர்கள் இறந்த நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் இறந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
இறந்த நபருக்கு திருமணமாகி பூவாறு(37) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.